Monday 1 October 2012

பெரியார் சிலைக்கு மாலை





செப்.17 அன்று காலை 9 மணியளவில் அரியலூர் மாவட்ட தலைவர் விடுதலை நீலமேகன் தலை மையில் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் தி.மு.க. பேச்சாளர் ச.அ.பெருநற்கிள்ளி, விடுதலை சிறுத்தை கட்சி மாவட்ட செயலாளர் செ.வே.மாறன், வி.சி. கட்சியின் பொறுப்பாளர் கரிகாலன், ப.க. மாவட்ட செயலாளர் தங்க.சிவமூர்த்தி, பக. மாவட்ட அமைப்பாளர் இரா.இளங்கோவன், பொதுக்குழு உறுப்பினர் சு.மணிவண்ணன், பொன்.செந்தில் குமார், க.தனபால், மா.சங்கர், சோ.க.சேகர், இளவழகன், இராச.செல்வகுமார், பெ.கோபால், பதனம் இராமதாஸ், வெ.இளவரசன், ப.கருணாநிதி, மு.முத்தமிழ்ச்செல்வன், அரங்க.இளவரசன் மற்றும் பலர் கலந்துகொண்டனர். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. செந்துறை அண்ணா சிலையில் அமைந்துள்ள கொடிக்கம்பத்தில் கொடியேற்றப் பட்டது.இறுதியாக செந்துறை சமத்துவபுரத்தில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கப் பட்டது. இறுதியாக ஒன்றிய தலைவர் சங்கர் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment