Sunday 17 June 2012

அரியலூர் மாவட்ட இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம்



அரியலூர் மாவட்ட இளைஞரணி கலந்துரையாடல் கூட்டத்தில் மாநில இளைஞரணி செயலாளர்  இரா.செயக்குமார் உரையாற்றினார். உடன் மாவட்ட கழக பொறுப்பாளர்கள் உள்ளனர். அரியலூர் 10.6.2012

அரியலூர், ஜூன் 17- அரியலூர் மாவட்ட இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம் 10.6.2012 அன்று காலை 11 மணிக்கு அரியலூர் எஸ்.எஸ்.திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில இளைஞரணி செயலாளர் இரா.செயக்குமார் தலைமையேற்று, உறுப்பினர் அட்டை வழங்கி இளைஞரணி யின் செயல்பாடுகள், அமைப்பை புதுப்பித்தல், உறுப்பினர் சேர்த்தல் தமிழர் தலைவரின் ஆயிரம் இளைஞர்கள் தேர்வு குறித்து சிறப்புரையாற்றினார்.
மாவட்ட தலைவர் விடுதலை நீலமேகன், மாவட்ட செயலாளர் க.சிந்தனைச்செல்வன் ஆகியோர் திருச்சி மண்டல இளைஞரணி செயலாளர் வழக்குரைஞர் மு.இராசா ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்றினர். பொதுக்குழு உறுப்பினர் மு.சிங்காரம், சு.மணிவண்ணன், பெரம்பலூர் மாவட்ட தலைவர் பெ.ஆறுமுகம், மாவட்ட துணைச் செயலாளர் இரத்தின.இராமச்சந்திரன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பொன். செந்தில்குமார், மாவட்ட ப.க. துணை தலைவர் பா.இளங்கோவன், அரியலூர் ஒன்றிய செயலாளர் செல்லமுத்து, ஆண்டிமடம் ஒன்றிய தலைவர் தமிழரசன், செந்துறை ஒன்றிய செயலாளர் சோ.க.சேகர், அமைப்பாளர் மு.முத்தமிழ்ச்செல்வன், திருமானூர் சு.பார்த்திபன், ப. மதியழகன், ஆண்டிமடம் க.செந்தில், க.கார்த்திகேயன், தர்மேந்தர், தா.பழூர் ஒன்றிய செயலர் வெங்கடாசலம், புகழேந்தி, வஞ்சினபுரம் வெ.இளவரசன், சுப்புராயன், அரியலூர் மு. கோபாலகிருஷ்ணன், கே.பி.ஆசைத்தம்பி ஆகியோர் கருத்துரை வழங்கினர். இறுதியாக பார்த்திபன் நன்றி கூறினார்.
தீர்மானங்கள்
1. தமிழர் தலைவர் கி.வீரமணி தலைமையில் தந்தை பெரியார் தத்துவங்களைப் பரப்பிட நாடு முழுவதும் பிரச்சாரங்களை மேற்கொள்வது.
2. சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையிலும், இளைஞர்களின் உடல்நலம் மற்றும் உளநலத்தைப் பாதுகாக்கும் வகையில் இளைஞர்கள் மிதிவண்டியைப் பயன்படுத்த வேண்டும் என்ற தமிழர் தலைவரின் கட்டளையை ஏற்று கழக இளைஞர்கள் அனைவரும் மிதிவண்டியைப் பயன்படுத்துவது என முடிவு செய்யப்படுகிறது.
3. தமிழர் தலைவர் தலைமையில் தந்தை பெரியார் பணியை முடித்திட திராவிடர் கழக இளைஞரணிக்கு ஏராளமான இளைஞர் களைச் சேர்ப்பது என முடிவு செய்யப்படுகிறது.
4. பார்ப்பனர்களின் புரட்டுகளையும், திரிபு வாதங்களையும் எதிர் கொண்டு அவற்றை முறியடிக்கும் வகையில் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்களால் எழுதப்பட்டு வெளிவரும் நூல்களை மக்கள் மத்தியில், இளைஞரணி சார்பில் பெரும் அளவில் பரப்புவது என முடிவு செய்யப்படுகிறது.

5. இளைஞரணி சார்பில் தெருமுனைக் கூட் டங்கள், மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வலங்கள் நடத்துவது என முடிவு செய்யப்படுகிறது.
6. தமிழர் தலைவர் அவர்களின் அறிவுரைப்படி இளைஞர்கள் அனைவரும் கணினி, இணையதளங்களைப் பயன்படுத்த கற்றுக் கொள்வது என முடிவு செய்யப்படுகிறது.
அரியலூர் மாவட்ட இளைஞரணி புதிய பொறுப்பாளர்கள்:
தலைவர்: பொன். செந்தில்குமார், செந்துறை. செயலாளர்: க. கார்த்திகேயன், ஆண்டிமடம்.
அமைப்பாளர்: சு.பார்த்திபன், திருமானூர். துணைத் தலைவர்: லெ.அர்ச்சுனன், செயங்கொண்டம்.
துணைச் செயலாளர்: வெ.இளவரசன், செந்துறை.

Saturday 16 June 2012

நுழைவுத் தேர்வை எதிர்த்து ஆர்ப்பாட்டம்!




அடுத்த ஆண்டு முதல் அகில இந்திய அளவில் நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில்சிபல் அறிவித்ததைக் கண்டித்து அரியலூர் மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி மற்றும் மாணவரணி சார்பில் அரியலூர் வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டம் 12.6.2012 அன்று நடத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்திற்கு திருச்சி மண்டல இளைஞரணி செயலாளர் வழக்கறிஞர். மு.இராசா தலைமையேற்றார். திராவிடர் கழக மண்டலச் செயலாளர் செ.காமராஜ, மாவட்டத் தலைவர் விடுதலை நீலமேகம், மாவட்டச் செயலாளர் க.சிந்தனைச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்து சிறப்புரை ஆற்றினர். மாவட்ட இளைஞரணி தலைவர் செந்தில்குமார் வரபேற்புரையாற்றினார். மாவட்ட இளைஞரணி செயலாளர் கார்த்திகேயன், மாவட்ட மாணவரணி பொறுப்பாளர் ரகுபதி, பொதுக்குழு உறுப்பினர்கள் மு.சிங்காரம், சு.மணிவண்ணன், அரியலூர் ஒன்றியத் தலைவர் சிவக்கொழுந்து, பொறியாளர் கோவிந்தராஜ், செந்துரை ஒன்றிய செயலாளர் செந்துரை ஒன்றிய தலைவர் சோ.க.சேகர், ஜெயங்கொண்டம் ஒன்றிய தலைவர் வை. செல்வராஜ், செந்துறை ஒன்றிய தலைவர் மா.சங்கர், மாவட்ட துணைத் தலைவர் இரத்தின இராமச்சந்திரன், மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் இளவரசன், வடசென்னை மாவட்ட இளைஞரணி செயலாளர் வை.கலையரசன், திருச்சி மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் தமிழ்மணி, ஆண்டிமடம் ஒன்றியத் தலைவர் இரா.தமிழரசன், ஆண்டிமடம் ஒன்றியச் செயலாளர் தியாக.முருகன், ஆண்டிமடம் செந்தில், செந்துறை ஒன்றிய அமைப்பாளர் மு. முத்தமிழ்ச் செல்வம், சுப்பராயன், மோகன்ராஜ், வஞ்சினாபுரம் கருப்பையா, அய்யப்பன், இராமகிருஷ்ணன், பாரதிராஜா, ஆண்டிமடம் இராமச்சந்திரன், அரியலூர் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் மரவனூர் மதியழகன், ஜெயங்கொண்டம் ஒன்றிய செயலாளர் மா.கரு ணாநிதி, தாப்பனூழுர் ஒன்றிய இரா. இராமச்சந்திரன், தமிழ்சேகரன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர்  பா.மதியழகன், வாரியங்காவல் மதியழகன், குமார் ஆகியோர் பங்கேற்றனர்.

ஆசிரியர் வேலாயுதம்



உடையார் பாளையத்தில் பகுத்தறிவுக்காகவும், தாழ்த்தப்பட்ட மக்களின் எழுச்சிக்காகவும் பாடுபட்ட ஆசிரியர் வேலாயுதம் (01-07-1910 --- 13-11-1947) சுதந்திரம் அடைந்த மூன்றே மாதத்தில் கழுத்து நெறித்துக் கெலை செய்யப்பட்டு, பலா மரத்தில் நிர்வாணமாகத் தெங்கவிட்ட கெடுமையை சாதி வெறியர்கள் இந்தப் புரட்சி வீரருக்குச் செய்துள்ளார்கள்.

அறிவுக் கண்ணைத் திறந்து, பகுத்தறிவு விதையை விதைத்து, சாதி இழுக்கைக் களைவதற்காகப் பாடுபட்டு இயங்கி வந்தர் உடையார் பாளையம் ஆசிரியர் வேலாயுதம் ஆவார்.

இறந்தவருக்காகப் பலரும் வருந்தியிருக்கிறார்கள். ஆனால் கெலை செய்தவர்கள் மிகச் சாதாரணமாக வெளிவந்து விட்டார்கள். பேச்சாற்றலும் செயல் திறனும் உடைய இவர் தன் வீட்டில் தமிழ் வாழ்க தமிழர் வாழ்க என எழுதியதேடு மட்டுமல்லாமல் தன் பள்ளிக்குத் தமிழ்த் தகைமைகளை அழைத்துப் பேசவும் வைத்துள்ளார்.