Friday, 7 September 2012

தமிழர்களின் அய்ந்து முக்கியப் பிரச்சினைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்ம்


அரியலூர்

சென்னை, செப்.3- இந்தியாவில் இலங்கை இராணுவத்தினருக்கு பயிற்சிஅளிக்கக் கூடாது. தமிழக மீனவர்கள் பிரச்சினையை தீர்க்க வேண்டும், கச்சதீவை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சேது சமுத்திரக் கால்வாய்த்திட்டத்தை உடனே நிறைவேற்ற வேண்டும். காவிரி நீர் பெற்றுத் தரவேண்டும். முல்லைப்பெரியாறு நீர்ப்பிரச்சினை தீர்க்கப்படவேண்டும். பதவி உயர்வில் தாழ்த்தப் பட்டோர், பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடுஅளிக்கப்படவேண்டும் என்ற கோரிக்கை களை வலியுறுத்தியும், மத்திய அரசைக்கண்டித்தும் தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் திராவிடர் கழகத்தின் சார்பில்  (31.8.2012) அன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டங்கள் வருமாறு:
அரியலூர் வட்டாட்சியர் அலுவலகம்முன்பு அரியலூர்மாவட்ட திராவிடர் கழகம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் 31.8.2012 அன்று நடை பெற்றது. ஆர்ப்பாட்டம் மாவட்ட தலைவர் விடுதலை நீலமேகன் தலைமையில் மாவட்ட துணைச் செயலாளர் இரத்தின.இராமச்சந்திரன், பொதுக்குழு உறுப்பினர்கள்: மு.சிங்காரம், சு.மணி வண்ணன், மண்டல இளைஞரணி செயலாளர் மு.இராசா ஆகியோர் முன்னிலையில் நடை பெற்றது. கழக தோழர்கள் திரளாக ஒலி முழக்க மிட்டனர். இறுதியாக அரியலூர் மாவட்ட செயலாளர் க.சிந்தனைச்செல்வன், திருச்சி மண்டல செயலாளர் சி.காமராசு ஆகியோர் கண்டன உரையாற்றினர். ஒன்றிய தலைவர் சி.சிவகொழுந்து, அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். இறுதியாக ஒன்றிய செயலாளர் செல்லமுத்து நன்றி கூறினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் பொன்.செந்தில் குமார், க.கார்த்திகேயன், வெ.இளவரசன் மாசங்கர், சோ.க.சேகர், மு.முத்தமிழ்ச்செல்வன், த.சுப்புராயன், இரா.தமிழரசன், சொ.மகாலிங்கம், பழ.வெங்கடா சலம், நா.மருதமுத்து, இரா.கோவிந்தராசன், ப.மதியழகன், அ.இளவழகன், சே.எழில்மலை, கோ.கோபால் மற்றும் ஏராளமான தோழர்கள் கலந்துகொண்டனர்.

வருமானத்தைப் பற்றி கவலைப்படாமல் தொண்டு செய்பவர்கள் தி.க. தோழர்கள் இணை ஏற்பு விழாவை தமிழர் தலைவர் நடத்தி வைத்து விளக்கவுரை


வை.கலையரசன் - உ.கனிமொழி ஆகியோரது இணை ஏற்பு விழாவினை தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் நடத்தி வைத்தார். உடன் குன்னம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.சிவசங்கர் மற்றும் கழகப் பொறுப்பாளர்கள் உள்ளனர்.
அரியலூர், செப். 2- அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டம், உல்லியக்குடி பெ.வைத்தியலிங்கம் - தங்கம் ஆகியோரது மகனும் வடசென்னை மாவட்ட இளைஞரணி செயலாளருமாகிய வை.கலையரசன், சோழன்குறிச்சி உத்ராபதி - தனம் ஆகியோரின் மகள் உ.கனிமொழி ஆகியோரது வாழ்க்கை இணைநல ஒப்பந்த விழா உல்லியக்குடி சமுதாயக்கூடத்தில் 31.8.2012 வெள்ளி காலை 10.30 மணியளவில் தொடங்கி சிறப்பாக நடைபெற்றது.
திராவிடர் கழக பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் பெரியார் திடலில் பணியாற்றும் வை.கலையரசன் திடலின் செல்லப்பிள்ளை என்றும், சுயமரியாதை வீரர்கள் உடையார்பாளையம் வேலாயுதம், உல்லியக்குடி அரங்கசாமி ஆகியோரை நினைவு கூர்ந்து வரவேற்புரையாற்றினார்.
அதனைத் தொடர்ந்து மாவட்ட தலைவர் விடுதலை நீலமேகன், மண்டல செயலாளர் சி.காமராஜ், சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் திருமகள் இறையன், கழக அமைப்பு செயலாளர் உரத்தநாடு இரா.குணசேகரன், ஒன்றிய குழு உறுப்பினர் அன்பழகன், தி.மு.க. ஒன்றிய செயலாளர் கா.சொ.க.கண்ணன், பெருநற்கிள்ளி, தி.மு.க. மாவட்ட செயலாளரும், குன்னம் சட்டபேரவை உறுப்பினருமான எஸ்.எஸ்.சிவசங்கர் ஆகியோரின் வாழ்த்துரைக்கு பின்னர் தமிழர் தலைவர் வாழ்வியல் உரையாற்றி வாழ்க்கை இணை நல ஒப்பந்த விழாவை நடத்தி வைத்தார்.
தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் தனது உரையில், சின்னஞ்சிறிய கிராமமான இந்த உல்லியக்குடிக்கு தந்தை பெரியார், அன்னை மணியம்மையார் உட்பட பலமுறை நானும் வருகை புரிந்துள்ளேன். சுயமரியாதை வீரர் அரங்கசாமி பலமுறை எங்களை அழைத்துள்ளார். இந்த ஊர் மட்டுமல்ல அரியலூர் மாவட்டமே சுயமரியாதைப் பயிர் செழித்த பூமி.
தந்தை பெரியார் கட்டளையை ஏற்று ஜாதி ஒழிப்புப் போராட்டம் மற்றும் பல்வேறு போராட்டங்களில் ஏராளமாக சிறை சென்றவர்களின் மண் இந்த மண் என்று நினைவு கூர்ந்தார். பேராசிரியர் இறையனால் அறிமுகப்படுத்தப்பட்டு மு.நீ.சிவராசனால் வளர்க்கப் பட்ட நல்ல தொண்டு செய்யக்கூடிய தோழர் கலையரசன், குடிஅரசு தொகுப்பிலே அவரது பணி பாராட்டுக்குரியது என்றும், தந்தை பெரியாரால் பெண்கள் பெற்ற உரிமைகள் திருமண மந்திரங்களின் பொருளையும் எடுத்துக்கூறி வாழ்வியல் உரையாற்றினார். நிகழ்ச்சியை மாவட்ட செயலாளர் க.சிந்தனைச் செல்வன் ஒருங்கிணைத்தார். உல்லியக் குடி சிற்றரசு நன்றி கூறினார்.
அரியலூர் மாவட்ட துணைச் செயலாளர் இரத்தின.இராமச்சந்திரன், மண்டல இளைஞரணி செயலாளர் மு.ராசா, மாவட்ட இளைஞரணி தலைவர் பொன்.செந்தில்குமார், மாவட்ட இளைஞ ரணி செயலாளர் க.கார்த்திகேயன், மாவட்ட ப.க. தலைவர் பு.கா.அன்பழகன், மாவட்ட ப.க. செயலா ளர் தங்க.சிவமூர்த்தி, ஒன்றிய பொறுப்பாளர்கள் சொ.மகாலிங்கம், பி.வெங்கடாசலம், சி.தமிழ்சேகரன், செயங்கொண்டம் ஒன்றிய செயலாளர் மா. கருணாநிதி, செந்துறை ஒன்றிய தலைவர் மா.சங்கர், செயலாளர் சேகர்,
அமைப்பாளர் முத்தமிழ்ச் செல்வன், அரியலூர் ஒன்றிய தலைவர் சி.சிவக் கொழுந்து, செயலாளர் ந.செல்லமுத்து, அமைப்பாளர் கோவிந்தராஜ், செங்கமலம் பொதுக்குழு உறுப்பினர் மு.சிங்காரம், சுப்புராயன், வஞ்சினபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் க.தனபால், மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் வெ.இளவரசன், தஞ்சை இளவரசன், மாநில ப.க. செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார், இறைவி, மாட்சி, பண் பொளி, இசையின்பன், செங்குட்டுவன்,
சைதை செல் வம், மதியழகன், கலைமணி, விஜய், மணியம்மை, மரகதமணி, பார்த்தீபன், தமிழ்மைந்தன், ஜோதி ராமலிங்கம், கடலூர் கா.எழிலரசன் உள்ளிட்ட ஏராளமான தோழர்களும் உறவினர்களும் சிறப்பாக பங்கேற்றனர். முன்னதாக வி.கை.காட்டியில் தமிழர் தலைவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பெரியார் பயிற்சி மய்யத்தின் ஒருங்கிணைப்பாளர் வை.கலையரசன் - உ.கனிமொழி மணவிழா தமிழர் தலைவர் நடத்தி வைக்கிறார்



பெரியார் பயிற்சி மய்யத்தின் ஒருங்கிணைப்பாளர் வை.கலையரசன் - உ.கனிமொழி மணவிழா தமிழர் தலைவர் நடத்தி வைக்கிறார்
சென்னை, ஆக. 30- வடசென்னை மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி செயலாளரும், பெரியார் பயிற்சி மய்யத்தின் ஒருங்கிணைப்பாளரு மான செயல்வீரர் வை.கலையரசன் - உ.கனி மொழி ஆகியோரின் வாழ்க்கை இணை நல ஒப்பந்த விழா, தமிழர் தலைவர் தலைமையில் 31.8.2012 வெள்ளிக்கிழமை காலை 10 மணி யளவில் அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டம் உல்லியக்குடி மணமகன் இல்லத்தில் நடைபெற உள்ளது.
தலைமையேற்று நடத்தி வைப்பவர்:
மானமிகு கி.வீரமணி, தலைவர், திராவிடர் கழகம்.
முன்னிலை:
எஸ்.எஸ்.சிவசங்கர் எம்.எல்.ஏ., (மாவட்டச் செயலாளர் தி.மு.க.)
தங்கள் வரவை எதிர்பார்ப்பவர்கள்: வை.சாமிதுரை-இளஞ்சியம்: உல்லியக்குடி; உத்திராபதி - தனம் : சோழங்குறிச்சி


தஞ்சாவூர், ஆக. 14- தஞ்சாவூர், திருச்சி மண்டல திராவிடர் கழகம் சார்பில் விடுதலை சந்தா வழங்கும் விழா 11.8.2012 சனி மாலை 6 மணியளவில் தஞ்சாவூர் ஆப்ரகாம்பண்டிதர் சாலையில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கழக செயலவைத் தலைவர் இராசகிரி கோ.தங்கராசு தலைமை வகித்து உரையாற்றினார். தஞ்சை மண்டல திராவிடர் கழக தலைவர் வெ.ஜெயராமன், திருச்சி மண்டல செயலாளர் சி.காமராஜ், திருச்சி மண்டல தலைவர் ஞா.ஆரோக்கியராஜ் ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்றினர். தொடக்கத்தில் தஞ்சை மாவட்ட தலைவர் வழக்கறிஞர் சி.அமர்சிங் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார்.
தொடர்ந்து குடந்தை மாவட்டச் செயலாளர் க.குருசாமி, தஞ்சை மாவட்டச் செயலாளர் த.ஜெகநாதன், திருச்சி மாவட்டச் செயலாளர் ச.கணேசன், அரியலூர் மாவட்டச் செயலாளர் க.சிந்தனைச் செல்வன், பட்டுக் கோட்டை மாவட்டச் செயலாளர் பெ.வீரையன், பெரம்பலூர் மாவட்டத் தலைவர் ப.ஆறுமுகம், அரியலூர் மாவட்டத் தலைவர் விடுதலை நீலமேகம், திருச்சி மாவட்டத் தலைவர் மு.சேகர், கரூர் மாவட்டத் தலைவர் மு.க.ராசசேகரன், பட்டுக்கோட்டை மாவட்டத் தலைவர் ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன், மாநில இளைஞரணி செயலாளர் தஞ்சை இரா.செயக்குமார், துணைப் பொதுச் செயலாளர் இரா.குணசேகரன், கழகப் பேச்சாளர் முனைவர் அதிரடி அன்பழகன் ஆகியோரின் உரையைத் தொடர்ந்து கழகப் பொதுச்செயலாளர் சு.அறிவுக்கரசு விடுதலை சந்தாத் தொகையினை பெற்றுக் கொண்டு சிறப்புரையாற்றினார்.
அவர் தனது உரையில்: விடுதலையின் சிறப்புகள், தமிழர் தலைவர் அவர்களின் 50 ஆண்டு கால விடுதலை ஆசிரியர் பணியின் உழைப்பு, டெசோ மாநாட்டின் சிறப்புகள் உள்ளிட்டவைகளை விளக்கி உரையாற்றினார். இறுதியாக நகர திராவிடர் கழகத் தலைவர் வ.ஸ்டாலின் நன்றி கூறினார்.
தஞ்சை மாவட்டம் 116 விடுதலை சந்தாக்கள்
தஞ்சை மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் 3 ஆயுள் சந்தா 3 ஆண்டு சந்தா 110 அரையாண்டு சந்தாக் களை தஞ்சை மாவட்ட ஒன்றிய கழகப் பகுத்தறி வாளர் கழக பொறுப்பாளர்கள் வழங்கினார்கள்.
பட்டுக்கோட்டை - 225 விடுதலை சந்தாக்கள்
பட்டுக்கோட்டை கழக மாவட்டத்தின் சார்பில் 10 ஆண்டுச் சந்தா 215 அரையாண்டு மொத்தம் 225 சந்தாக்களுக்கான தொகையினை மாவட்ட ஒன்றிய கழகப் பொறுப்பாளர்கள் வழங்கினார்கள்.
கும்பகோணம் - 64 விடுதலை சந்தாக்கள்
கும்பகோணம் கழக மாவட்டத்தின் சார்பில் 1 ஆண்டு சந்தா 63 அரையாண்டு சந்தா மொத்தம் 64 சந்தாவுக்கான தொகையினை குடந்தை மாவட்ட ஒன்றிய நகரக் கழக பொறுப்பாளர்கள் வழங் கினார்கள்.
திருச்சி - 5 விடுதலை சந்தாக்கள்
திருச்சி கழக மாவட்டத்தின் சார்பில் 1 ஆயுள் சந்தா 17 ஆண்டு சந்தா 37 அரையாண்டு சந்தா மொத்தம் 55 சந்தாவுக்கான தொகையினை திருச்சி மாவட்ட ஒன்றிய நகர கழக பொறுப்பாளர்கள் வழங்கினார்கள்.
அரியலூர் - 60 விடுதலை சந்தாக்கள்
அரியலூர் மாவட்ட கழகத்தினர் விடுதலை சந்தாக்களை கழகப் பொதுச்செயலாளரிடம் வழங்கினர்.
அரியலூர் கழக மாவட்டத்தின் சார்பில் 19 ஆண்டு சந்தா 41 அரையாண்டு சந்தா என மொத்தம் 60 சந்தாக்களுக்கான தொகையினை அரியலூர் மாவட்டக் கழக ஒன்றிய நகர கழக பொறுப் பாளர்கள் வழங்கினார்கள்.
பெரம்பலூர் - 30 விடுதலை சந்தா
பெரம்பலூர் மாவட்ட கழகத்தினர் விடுதலை சந்தாக்களை கழகப் பொதுச்செயலாளரிடம் வழங்கினர்.
பெரம்பலூர் மாவட்டகழகம் சார்பில் 2 ஆயுள் சந்தா 28 அரையாண்டு சந்தா என மொத்தம் 30 சந்தாவுக் கான தொகையினை பெரம்பலூர் மாவட்டக் கழகப் பொறுப்பாளர் கள் வழங்கினார்கள்.
லால்குடி கழக மாவட்ட 12 சந்தா
லால்குடி கழக மாவட்டத்தின் சார்பில் 12 விடுதலை சந்தா வுக்கான தொகையினை வழங்கினார்கள்.
திருச்சி திராவிடர் தொழிலாளர் பேரவை - 21 விடுதலை சந்தா
திருச்சி பெல் திராவி டர்தொழிலாளர் பேரவை சார்பில் 20 அரையாண்டு சந்தா 1 ஆண்டு சந்தா மொத்தம் 21 சந்தாவுக்கான தொகை யினை வழங்கினார்கள்.
நிகழ்ச்சியில் பங்கேற்றோர்: மாநில மகளிரணி பிரச்சார செயலாளர் வீ.கலைவாணி, மாநில மாணவரணி செயலாளர் ம.திராவிடஎழில், மாநில தொழிலாளர் பேரவை பொதுச் செயலாளர் பெல்.ஆறுமுகம், குடந்தை மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் சு.விஜயகுமார், கழகப் பேச்சாளர்      இரா.பெரியார் செல்வன், மண்டல இளைஞரணி செயலாளர் நா.இராம கிருஷ்ணன், குடந்தை மாவட்ட அமைப் பாளர் வ.அழகுவேல், தஞ்சை மாவட்டத் துணைத்தலைவர் ப.தேசிங்கு, குடந்தை மாவட்டத் துணைத் தலைவர் அரு.ரெங்க நாதன், பொதுக்குழு உறுப்பினர் ச.மணியன், பொதுக்குழு உறுப் பினர் புலவஞ்சி, இரா. இராமையன், தஞ்சை மாவட்ட துணைச் செய லாளர் சந்துரு, மாவட்ட விவசாயணி தலைவர் வை.இராஜேந்திரன், மாவட்ட ப.க. செய லாளர் கோபு.பழனிவேல், தஞ்சை மாவட்ட இளை ஞரணி தலைவர் மாநல். மெய்க்கப்பன், மாவட்ட இளைஞரணி செய லாளர் இரா.இளவரசன், தஞ்சை மாவட்ட இளை ஞரணி அமைப்பாளர் அல்லூர் பாலு தஞ்சை ஒன்றியத் தலைவர் மு.சே கர், ஒன்றிய செயலாளர் ஆட்டோ ஏகாம்பரம், தஞ்சை நகரச் செய லாளர் சு.முருகேசன், உரத்தநாடு ஒன்றியத் தலைவர் ஆ.இலக்கு மணன், ஒன்றிய செய லாளர் வழக்கறிஞர் அ.அருணகிரி, வலங்கை மான் ஒன்றியத் தலைவர் கோவிந்தன், நீடாமங் கலம் ஒன்றியத் தலைவர் கோ.கணேசன், பேராவூ ரணி நகரத் தலைவர் இரா.நீலகண்டன், மன்னை நகரத் தலைவர் ஆர்.எஸ்.அன்பழகன், அம்மாப்பேட்டை ஒன்றியத் தலைவர் வை. தேசபந்து, ஒன்றிய செய லாளர் ஜவகர், வன் னிப்பட்டு தமிழ்ச்செல் வன், சேதுபாவாசத்திர ஒன்றிய செயலாளர் சத் தியமூர்த்தி, பட்டுக் கோட்டை நகரத் தலை வர் சின்னக்கண்ணு, தஞ்சை நகர இளை ஞரணி செயலாளர் மா.இராசஇராசன், தஞ்சை நகர இளை ஞரணி இரா.வெற்றிக் குமார், மாவட்ட மக ளிரணி தலைவர் பாக் கியம், திருச்சி நகரத் தலைவர் ஆசிரியர் நற் குணம், தஞ்சை நகர இளைஞரணி துணைத் தலைவர் அ.பெரியார் செல்வன், உரத்தநாடு ஒன்றிய இளைஞரணி தலைவர் நா.பிரபு, தஞ்சை ஒன்றிய இளை ஞரணி தலைவர் பெட் டிக்கடை தனபால், தஞ்சை ஒன்றிய ப.க. அமைப்பாளர் ஆசிரியர் ராஜு உள்ளிட்ட ஏராள மான கழக தோழர் களும், பொது மக்களும் பங்கேற்று சிறப்பித்தனர்.
தொடக்கத்தில் விடுதலையில் தமிழர் தலைவர் அவர்களின் 50 ஆண்டுகள் ஆசிரியர் பணியினை பாராட்டி  விடுதலையில் வெளிவந்த தலையங்கத்தைப் இந்துமதி பெரியார் செல்வன் அவர்கள் படித்தார்கள். தொடக்கத்தில் குடந்தை ஜெய மணி குமார் மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சி நடத்தினார்.