Monday 1 October 2012

தாசிகளுடன் ஒரு மடாதிபதி


குடிஅரசு தரும் வரலாற்றுக் குறிப்புகள்
தேச சஞ்சாரம் செய்து கொண்டு திரியும் ஒரு பார்ப்பன வைணவ மடாதிபதி இயல்பாய் இருக்க வேண்டிய மாசற்ற நடையின்றி இரவில் பலரும் அறியத் தாம் தங்கியுள்ள இடத்திற்கே தாசிகளைப் பயமின்றி வரவழைத்து, அவர்களிடம் ஒரு மாதிரி சிரித்துக் கொண்டும், குறும்புத்தன மாகவும் பேசுவார், இப்படிப்பட்ட ஆச்சாரியரிடம் நமது இளம் பெண்கள் பயபக்தியுடன் சென்று புண்ணியத்தை நிரப்பிக் கொண்டு வருவதை நினைக்கும் பொழுது கோபமும், துக்கமும் நமக்கு வராமலிருக்குமா? வந்து என்ன பயன்? நம் பெண்கள் தற்பொழுதும் சாமியார் களைத் தேடி மடங்களுக்குச் செல்வது குறைய வில்லையே! என் செய்வது?
ஒரு ஆச்சாரியரின் அடாதசெய்கை
அக்காலத்தில் கல்வி அறிவில் மிக்க தேர்ந்தவர்களாயும், உலக விஷயங்களில் இச்சையற்று மாசற்ற தடையை உடையவர்களாயும், தனது சீடர்களுக்கு உபதேசம் செய்து அவர்களை நல்வழிப் படுத்துவதிலேயே கவலை உடையவர்களாயும் உள்ள உத்தமர்களை ஆச்சார்யர்களாக வைத்திருந்தார்கள். இக்காலத்திலுள்ள, ஆச்சாரியர்களில் பெரும்பாலோர் பல விதத்திலும் குறைசொல்லக் கூடும்விதமான இருக்கின்றனர். பணம் தட்டிப் பறித்துக் கொண்டு போவதற்காகவே பெரும் பாலோர் சீடர்கள் வசிக்கும் இடங்களுக்குச் செல்லுகிறார்களே தவிர அவர்களுக்கு வேறு கவலை கிடையாது. தனக்கும் கொஞ்சம் கல்வி அறிவு இருக்கிறது என்பதைக் காட்டுவதற்காக தாங்கள் தங்கியிருக்கும் இடங்களில் இரண்டொரு காலக்ஷேபங்கள் செய்து ஏமாற்றுவதும் உண்டு. பணம் பெற்றுக்கொண்டு போவதுடன் நிற்காமல் அவர்கள் ஊரில் சிலருடைய செய்கை அறிவுடையார் மிக்க வெறுக்கத் தக்க நிலைமையில் இருந்து வருகின்றன. அவ்விதம் தற்சமயம் ஒரு வைணவப் பார்ப்பன மடாதிபதி தேச சஞ்சாரம் செய்துகொண்டு திரிகின்றார். அவர் அநேகமாக செல்லும் இடங்களில் எல்லாம் இரவில் பலரும் அறியத் தங்கியிருக்-கும் வீட்டிற்கே தாசிகளைப் பயமில்லாமல் வரவழைக்கிறார். யாராவது, தாசி இங்கு எதற்காக வரவேண்டுமென்று கேட்டால், இரண்டொரு வயிற்றுச் சோற்றுப் பக்தர்-களைத் தயார் செய்து வைத்துக் கொண்டு அவர்களை விட்டு, தாசிகள் சுவாமிகளிடம் சமார்ச்சனை செய்துகொள்ளுவதற்கு வந்து அலைந்து கொண்டிருக்கிறார்களென சொல்லச் செய்கிறார். இப்பேர்ப்பட்ட ஆச்சாரியரிடத்தில் நமது இளம் பெண்களைப் பக்தியுடன் சென்று சமார்ச்சனைச் செய்து-கொண்டு திரௌபதி வஸ்திராபரணம் கதையையும் கேட்கின்றார்கள். இவர்கள் பெண் பிள்ளைகளிடத்தில் பேசும்பொழுது ஒரு மாதிரி சிரித்துக்கொண்டும், குறும்-புத்தனமாகவும் பேசுகிறார். இந்தப் பார்ப்-பனருடைய கர்வமும், இறுமாப்பையும் நமம்மக்களிடம் உள்ள மடமையையும் நினைக்கும் பொழுது கோபமும் துக்கமும் வராமலிருக்குமா? கன்னி மேயோவிற்கு இவரைப்பற்றித் தெரியாமல் போய்விட்டது போலும்.
- தேவிதாஸன் குடிஅரசு11.12.1927, பக்கம், தகவல் முநீசி

No comments:

Post a Comment