Saturday 6 October 2012

காவிரி கருநாடகத்துக்கே எனில் தமிழ்நாடு யாருக்காம்?


- க. சிந்தனைச்செல்வன்
அரியலூர் மாவட்ட செயலாளர்



    

     பிரச்சினைகளுக்கு மத்தியில் மட்டுமே வாழ்கின்ற இனமான தமிழனின் இன் றைய தேதிக்கான பிரச்சினை காவிரிநீர் கண்களில் கவலையோடு காவிரிக்காக காத்திருக்கும் டெல்டா மாவட்ட விவ சாயிகள். நீரின்றி அமையாது உலகு என்றான் வள்ளுவப் பெருந்தகை. மூன் றாம் உலகப் போர் நடக்கப் போவது தண்ணீருக்காகவே என்கிறார்கள் ஆய் வாளர்கள். இப்போது தமிழ்நாடு தண்ணீ ருக்காக பக்கத்து மாநிலங்களோடு போராட - போரிட வேண்டியிருக்கிறது.
பிச்சையா? உரிமையா?
இயற்கை அமைப்பின்படி தமிழ்நாட் டின் பாசனத்திற்கு தேவையான நீரை காவிரி, முல்லைப் பெரியாறு போன்றவை தான் கொடுத்து வருகின்றன. காவிரியில் புதிது புதிதாய் அணைகளைக் கட்டி தண்ணீரை கருநாடகா தேக்கிக் கொண்டதால் தமிழன் கண்ணீரையே பாசனத்திற்கு பயன்படுத்த வேண்டிய நிலை. தனக்கு மிஞ்சிதானே தானதருமம் என்று பிரச்சினையின் தன்மை புரியாமல் பேசும் மூடர்களாய் வாழும் மக்கள் கூட்டம் ஒருபுறம். காவிரி கருநாடகத்தில் தோன்றுவதால் அவர்களுக்கு மட்டுமே உரிமை என்ற தவறான புரிதலோடு பிரச்சினையை அணுகும் யாராக இருந் தாலும் உலகியல் சட்டப்படி, நியாயப்படி நீரியல் சட்டப்படி ஆயக்கட்டு உரிமை என்பது கடைமடைப் பகுதி வரை அனை வருக்கும் உண்டு என்பதை புரிந்து கொள்ள வேண்டும். காவிரி நீர் என்பது தமிழர்களின் உரிமை  - பிச்சையல்ல. நாட்டின் முதுகெலும்பு விவசாயம் என்கிறான். விவசாயிகளின் வாழ்வா தாரம் பாதிக்கப்படும் போது - முது கெலும்பு முறிக்கப்படும்போது கண்டும் காணாமல் இருக்கும் நடுவண்அரசு.
அந்நியன் ஆண்டபோது...
காவிரிநீரைப் பகிர்ந்துகொள்வது தொடர்பாக 1892ஆம் ஆண்டு பழைய மைசூரு அரசுக்கும், சென்னை அரசாங்கத் துக்கும் வெள்ளையர்கள், அந்நியர்கள் ஆண்டபோது ஒப்பந்தம் போடப்பட்டு அது பின்னர் 1924ஆம் ஆண்டு புதுப்பிக்கப்பட்டது. 50 ஆண்டு களுக்கான அந்த ஒப்பந்தம் 1974ஆம் ஆண்டு மறுஆய்வு செய்து புதுப்பித் திருக்க வேண்டும். 1974 முதல் கருநாடகா தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர மறுத்து வஞ்சித்து வருகிறது. பல முறை பேச்சு வார்த்தை என்ற பெயரால் ஏமாற்று வேலை நடத்தியது கருநாடக அரசு.
நடுவர் மன்றம் அமைத்திட
பிரச்சினையை தீர்க்க நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்று 1980-களிலேயே சொன்ன இயக்கம் திராவிடர் கழகம். நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்பதற்காக போராடி சிறை சென்ற தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி. அந்த கருத்து நாளும் வலுப் பெற்று சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் அவர்கள் ஆட்சிக் காலத்திலே நடுவர் மன்றம் அமைக்கப்பட்டு, விசாரித்து இடைக்கால தீர்ப்பாக 205 டி.எம்.சி. தண்ணீரை கருநாடகம் தமிழ்நாட்டிற்கு கொடுக்க வேண்டும் என்று சொன்ன போது அதையும் அமல்படுத்தவில்லை கருநாடகா. அணை நிரம்பி உடையும் நிலை வந்தால் மட்டுமே தண்ணீரை திறந்து விடும் போக்குதான் இன்றளவும் தொடர்கிறது.

காவிரி நதியில் மொத்தம் உள்ள 740 டி.எம்.சி. தண்ணீரில் தமிழகத்திற்கு 419 டி.எம்.சி. தண்ணீரும், கருநாடகா 270 டி.எம்.சி., கேரளா 30 டி.எம்.சி., புதுச்சேரி 7 டி.எம்.சி. தண்ணீரையும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று 2007 ஆம் ஆண்டு நடுவர் மன்றம் வழங்கிய இறுதித் தீர்ப்பும் இன்றுவரை நடைமுறைப்படுத்தப் படவில்லை. 9 ஆண்டுகளுக்குப்பிறகு நீதிமன்ற கட்டாயத்தின் பேரில் கூடிய காவிரி நதிநீர் ஆணையம் 19.9.2012 அன்று கூடி கலைந்தது. தமிழ்நாட்டின் குறைந்தபட்ச தேவையான ஒரு நாளைக்கு 2 டி.எம்.சி. தண்ணீர் வேண் டும் என்ற தற்காலிக கோரிக்கையும் புறக்கணிக்கப்பட்டு 9000 கனஅடி நீரை (3/4 டி.எம்.சி) திறந்துவிட பிரதமர் மன்மோகன் உத்தரவிட்டார். அதையும் நிறைவேற்ற மறுத்து அடம்பிடிக்கிறது கர்நாடகா. தமிழக அரசு மீண்டும் உச்ச நீதிமன்றத்தை அணுகியபோது கருநா டகா காவிரியில்  உடனடியாக தண்ணீர் திறந்து விட வேண்டும். இல்லையேல் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று உச்சநீதிமன்றம் எச்சரிக்கை விடுத்தது. மீண்டும் துவங்கிவிட்டது கருநாடகாவில் போராட்டம் - ஆர்ப்பாட்டம் மறியல், தமிழ்நாட்டிற்கு தண்ணீர் கொடுக்காதே காவிரி கருநாடகாவுக்கே என்றெல்லாம் ஆர்ப்பரிக்கிறார்கள். கன்னட அமைப்பினர் மறியல் போராட்டம், போக்குவரத்து பாதிப்பு எல்லைகளில் வாகனங்கள் நிறுத்தம் சாம்ராஜ் நகர், மாண்டியா மாவட்டங்களில் தொடரும் போராட்டம். உருவ பொம்மைகள் கொளுத்துதல் என்று சண்டித்தனம் செய்யும் கன்னடர்கள். தமிழ் நாட்டை அச்சுறுத்த நினைக்கிறார்களா?
தேசியம் பேசும் கட்சிகள்
தேசியம் என்பது மனிதனுக்கு ஒரு மயக்கமும் வெறியும் உண்டாக்கும் வார்த்தை என்றார் பெரியார். இந்திய தேசிய மயக்கம் கொண்ட ஒருமைப்பாடு பேசும் காங்கிரசு, பாரதிய ஜனதா, கம்யூனிஸ்ட் கட்சிகள் மாநிலத்திற்கு மாநிலம் கட்சிநலன், ஓட்டு நலன், கருதி இரட்டை வேடம் போட்டு இந்திய தேசியம் என்பதே பித்தலாட்டம் என்று நிரூபிக் கிறார்கள். தமிழன் இன உணர்வு பேசினால் வகுப்புவாதம், பிரிவினைவாதம் என அலறும் தேசியக் கட்சிகள் செய்வது என்னவகை அரசியல்! தமிழர் நலனைப் புறக்கணித்து இந்திய தேசியத்தை காட்டிக் காக்கும் வெறியோடு செயல்படும் கட்சிகளை புறந்தள்ளுவோம்.
ஜனநாயகம் என்ற பெயரால் தந்திரத்திலும் வஞ்சகத்திலும், மக்களின் அறியாமையினாலும் ஆட்சி செய்யும் அரசாங்கத்தைவிட, துப்பாக்கியாலும், பீரங்கியாலும் ஆட்சி செய்யும் அரசாங்கம் மேலானது என்றார் பெரியார்.
தோழர்களே ஜனநாயகம் என்ற பெயரால் நடக்கும் கேலிக் கூத்துகளை ஒதுக்க வேண்டாமா? ஈழப் பிரச்சினை, மீனவர் பிரச்சினை, இடஒதுக்கீட்டு பிரச்சினை, முல்லைப் பெரியாறு, காவிரிநீர் இப்படி எல்லாவற்றிலும் நம்மை வஞ்சிக்கின்ற தேசியம் நமக்கு தேவையா என்பதை நாம் மறுபரிசீலனை செய்ய வேண்டாமா? தனியாட்சியல்ல - மாநில சுயாட்சிகூட வழங்க மறுப்பது நியாயமா? வரலாற்றின் பக்கங்களில் இந்தியா ஒரே நாடா? காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை 5 ஆண்டுகளுக்கு மேலாக கெசட்டில் வெளியிடாத காவிரி நடுவர் மன்றத்திற்கு தலைவரை நியமிக் காத மத்திய அரசு தமிழகத்தை தனது நாட்டின் ஒரு பகுதியாக கருதுகிறதா - இல்லையா என்பதை தெளிவுபடுத்த வேண்டும். பிரதமர் உத்தரவை ஏற்க மறுக் கும் கருநாடகத்தின் மீது நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டுவது ஏன்?
தமிழர்களே, தமிழ்நாட்டு நலனைப் புறக்கணிக்கின்ற யாரையும் புறக்கணிக் கின்ற மனநிலை நமக்கு வர வேண்டும். கருநாடகத்தின் தேவைக்கு போகத்தான் காவிரி நீர் தமிழ் நாட்டுக்கென்றால் நமது தேவைக்கு போகத்தான் நெய்வேலி மின்சாரம் அடுத்தவனுக்கு என்று நாம் சொல்ல வேண்டும் ஒரு சொட்டு நீர் கூட தர மாட்டோம் என்றால் யூனிட் மின்சாரம் கூட அளிக்க முடியாது கூடாது என்ற நிலையை நாம் ஏற்படுத்த வேண்டும். உணர்ச்சி பெற வேண்டும் தோழர்களே காவிரி தஞ்சை மாவட்டத்தின் பிரச்சினை யல்ல தமிழர்களின் உரிமைப் பிரச்சினை. உரிமைகளை ஒருபோதும் விட்டுக் கொடுக்க மாட்டோம்.
தனித்தனி நாடுகளில் ஏற்படும் நதிநீர் பிரச்சினைகள் தீர்க்கப்படும்போது ஏக இந்தியாவில் ஏன் தீர்க்க முடியவில்லை! சிந்திக்க வேண்டாமா?
காவிரி கருநாடகத்துக்கே என்று அவர்கள் சொன்னால் தமிழ்நாடு யாருக் காம்? கனடாவுக்குப் பக்கத்திலா இருக் கிறது தமிழ்நாடு?

No comments:

Post a Comment