Friday 7 September 2012



தஞ்சாவூர், ஆக. 14- தஞ்சாவூர், திருச்சி மண்டல திராவிடர் கழகம் சார்பில் விடுதலை சந்தா வழங்கும் விழா 11.8.2012 சனி மாலை 6 மணியளவில் தஞ்சாவூர் ஆப்ரகாம்பண்டிதர் சாலையில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கழக செயலவைத் தலைவர் இராசகிரி கோ.தங்கராசு தலைமை வகித்து உரையாற்றினார். தஞ்சை மண்டல திராவிடர் கழக தலைவர் வெ.ஜெயராமன், திருச்சி மண்டல செயலாளர் சி.காமராஜ், திருச்சி மண்டல தலைவர் ஞா.ஆரோக்கியராஜ் ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்றினர். தொடக்கத்தில் தஞ்சை மாவட்ட தலைவர் வழக்கறிஞர் சி.அமர்சிங் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார்.
தொடர்ந்து குடந்தை மாவட்டச் செயலாளர் க.குருசாமி, தஞ்சை மாவட்டச் செயலாளர் த.ஜெகநாதன், திருச்சி மாவட்டச் செயலாளர் ச.கணேசன், அரியலூர் மாவட்டச் செயலாளர் க.சிந்தனைச் செல்வன், பட்டுக் கோட்டை மாவட்டச் செயலாளர் பெ.வீரையன், பெரம்பலூர் மாவட்டத் தலைவர் ப.ஆறுமுகம், அரியலூர் மாவட்டத் தலைவர் விடுதலை நீலமேகம், திருச்சி மாவட்டத் தலைவர் மு.சேகர், கரூர் மாவட்டத் தலைவர் மு.க.ராசசேகரன், பட்டுக்கோட்டை மாவட்டத் தலைவர் ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன், மாநில இளைஞரணி செயலாளர் தஞ்சை இரா.செயக்குமார், துணைப் பொதுச் செயலாளர் இரா.குணசேகரன், கழகப் பேச்சாளர் முனைவர் அதிரடி அன்பழகன் ஆகியோரின் உரையைத் தொடர்ந்து கழகப் பொதுச்செயலாளர் சு.அறிவுக்கரசு விடுதலை சந்தாத் தொகையினை பெற்றுக் கொண்டு சிறப்புரையாற்றினார்.
அவர் தனது உரையில்: விடுதலையின் சிறப்புகள், தமிழர் தலைவர் அவர்களின் 50 ஆண்டு கால விடுதலை ஆசிரியர் பணியின் உழைப்பு, டெசோ மாநாட்டின் சிறப்புகள் உள்ளிட்டவைகளை விளக்கி உரையாற்றினார். இறுதியாக நகர திராவிடர் கழகத் தலைவர் வ.ஸ்டாலின் நன்றி கூறினார்.
தஞ்சை மாவட்டம் 116 விடுதலை சந்தாக்கள்
தஞ்சை மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் 3 ஆயுள் சந்தா 3 ஆண்டு சந்தா 110 அரையாண்டு சந்தாக் களை தஞ்சை மாவட்ட ஒன்றிய கழகப் பகுத்தறி வாளர் கழக பொறுப்பாளர்கள் வழங்கினார்கள்.
பட்டுக்கோட்டை - 225 விடுதலை சந்தாக்கள்
பட்டுக்கோட்டை கழக மாவட்டத்தின் சார்பில் 10 ஆண்டுச் சந்தா 215 அரையாண்டு மொத்தம் 225 சந்தாக்களுக்கான தொகையினை மாவட்ட ஒன்றிய கழகப் பொறுப்பாளர்கள் வழங்கினார்கள்.
கும்பகோணம் - 64 விடுதலை சந்தாக்கள்
கும்பகோணம் கழக மாவட்டத்தின் சார்பில் 1 ஆண்டு சந்தா 63 அரையாண்டு சந்தா மொத்தம் 64 சந்தாவுக்கான தொகையினை குடந்தை மாவட்ட ஒன்றிய நகரக் கழக பொறுப்பாளர்கள் வழங் கினார்கள்.
திருச்சி - 5 விடுதலை சந்தாக்கள்
திருச்சி கழக மாவட்டத்தின் சார்பில் 1 ஆயுள் சந்தா 17 ஆண்டு சந்தா 37 அரையாண்டு சந்தா மொத்தம் 55 சந்தாவுக்கான தொகையினை திருச்சி மாவட்ட ஒன்றிய நகர கழக பொறுப்பாளர்கள் வழங்கினார்கள்.
அரியலூர் - 60 விடுதலை சந்தாக்கள்
அரியலூர் மாவட்ட கழகத்தினர் விடுதலை சந்தாக்களை கழகப் பொதுச்செயலாளரிடம் வழங்கினர்.
அரியலூர் கழக மாவட்டத்தின் சார்பில் 19 ஆண்டு சந்தா 41 அரையாண்டு சந்தா என மொத்தம் 60 சந்தாக்களுக்கான தொகையினை அரியலூர் மாவட்டக் கழக ஒன்றிய நகர கழக பொறுப் பாளர்கள் வழங்கினார்கள்.
பெரம்பலூர் - 30 விடுதலை சந்தா
பெரம்பலூர் மாவட்ட கழகத்தினர் விடுதலை சந்தாக்களை கழகப் பொதுச்செயலாளரிடம் வழங்கினர்.
பெரம்பலூர் மாவட்டகழகம் சார்பில் 2 ஆயுள் சந்தா 28 அரையாண்டு சந்தா என மொத்தம் 30 சந்தாவுக் கான தொகையினை பெரம்பலூர் மாவட்டக் கழகப் பொறுப்பாளர் கள் வழங்கினார்கள்.
லால்குடி கழக மாவட்ட 12 சந்தா
லால்குடி கழக மாவட்டத்தின் சார்பில் 12 விடுதலை சந்தா வுக்கான தொகையினை வழங்கினார்கள்.
திருச்சி திராவிடர் தொழிலாளர் பேரவை - 21 விடுதலை சந்தா
திருச்சி பெல் திராவி டர்தொழிலாளர் பேரவை சார்பில் 20 அரையாண்டு சந்தா 1 ஆண்டு சந்தா மொத்தம் 21 சந்தாவுக்கான தொகை யினை வழங்கினார்கள்.
நிகழ்ச்சியில் பங்கேற்றோர்: மாநில மகளிரணி பிரச்சார செயலாளர் வீ.கலைவாணி, மாநில மாணவரணி செயலாளர் ம.திராவிடஎழில், மாநில தொழிலாளர் பேரவை பொதுச் செயலாளர் பெல்.ஆறுமுகம், குடந்தை மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் சு.விஜயகுமார், கழகப் பேச்சாளர்      இரா.பெரியார் செல்வன், மண்டல இளைஞரணி செயலாளர் நா.இராம கிருஷ்ணன், குடந்தை மாவட்ட அமைப் பாளர் வ.அழகுவேல், தஞ்சை மாவட்டத் துணைத்தலைவர் ப.தேசிங்கு, குடந்தை மாவட்டத் துணைத் தலைவர் அரு.ரெங்க நாதன், பொதுக்குழு உறுப்பினர் ச.மணியன், பொதுக்குழு உறுப் பினர் புலவஞ்சி, இரா. இராமையன், தஞ்சை மாவட்ட துணைச் செய லாளர் சந்துரு, மாவட்ட விவசாயணி தலைவர் வை.இராஜேந்திரன், மாவட்ட ப.க. செய லாளர் கோபு.பழனிவேல், தஞ்சை மாவட்ட இளை ஞரணி தலைவர் மாநல். மெய்க்கப்பன், மாவட்ட இளைஞரணி செய லாளர் இரா.இளவரசன், தஞ்சை மாவட்ட இளை ஞரணி அமைப்பாளர் அல்லூர் பாலு தஞ்சை ஒன்றியத் தலைவர் மு.சே கர், ஒன்றிய செயலாளர் ஆட்டோ ஏகாம்பரம், தஞ்சை நகரச் செய லாளர் சு.முருகேசன், உரத்தநாடு ஒன்றியத் தலைவர் ஆ.இலக்கு மணன், ஒன்றிய செய லாளர் வழக்கறிஞர் அ.அருணகிரி, வலங்கை மான் ஒன்றியத் தலைவர் கோவிந்தன், நீடாமங் கலம் ஒன்றியத் தலைவர் கோ.கணேசன், பேராவூ ரணி நகரத் தலைவர் இரா.நீலகண்டன், மன்னை நகரத் தலைவர் ஆர்.எஸ்.அன்பழகன், அம்மாப்பேட்டை ஒன்றியத் தலைவர் வை. தேசபந்து, ஒன்றிய செய லாளர் ஜவகர், வன் னிப்பட்டு தமிழ்ச்செல் வன், சேதுபாவாசத்திர ஒன்றிய செயலாளர் சத் தியமூர்த்தி, பட்டுக் கோட்டை நகரத் தலை வர் சின்னக்கண்ணு, தஞ்சை நகர இளை ஞரணி செயலாளர் மா.இராசஇராசன், தஞ்சை நகர இளை ஞரணி இரா.வெற்றிக் குமார், மாவட்ட மக ளிரணி தலைவர் பாக் கியம், திருச்சி நகரத் தலைவர் ஆசிரியர் நற் குணம், தஞ்சை நகர இளைஞரணி துணைத் தலைவர் அ.பெரியார் செல்வன், உரத்தநாடு ஒன்றிய இளைஞரணி தலைவர் நா.பிரபு, தஞ்சை ஒன்றிய இளை ஞரணி தலைவர் பெட் டிக்கடை தனபால், தஞ்சை ஒன்றிய ப.க. அமைப்பாளர் ஆசிரியர் ராஜு உள்ளிட்ட ஏராள மான கழக தோழர் களும், பொது மக்களும் பங்கேற்று சிறப்பித்தனர்.
தொடக்கத்தில் விடுதலையில் தமிழர் தலைவர் அவர்களின் 50 ஆண்டுகள் ஆசிரியர் பணியினை பாராட்டி  விடுதலையில் வெளிவந்த தலையங்கத்தைப் இந்துமதி பெரியார் செல்வன் அவர்கள் படித்தார்கள். தொடக்கத்தில் குடந்தை ஜெய மணி குமார் மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சி நடத்தினார்.

No comments:

Post a Comment