Sunday 5 August 2012

கீழமாளிகை மு.அறிவுச்செல்வன் - மா.செல்வராணி இணையேற்பு விழா



கழகப் பொதுச் செயலாளர் கலி.பூங்குன்றன் நடத்தி வைத்தார்

செந்துறை, ஜூலை 18- அரியலூர் மாவட்டம் செந்துறை வட்டம் அ.முருகேசன் - ராஜகுமாரி ஆகியோர் மகன் மு.அறிவுச்செல்வன், சோழன்குடிக்காடு பாண்டியன் - அம்சாதேவி ஆகியோரது மகள் பா.செல்வராணி ஆகியோரின் இணையேற்பு விழா 15.7.2012 ஞாயிறு காலை 9 மணி யளவில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு வருகைதந்த அனைவரையும் வஞ்சனிபுரம் ஊராட்சி மன்ற தலைவர் க.தனபால் வரவேற்றார். திருச்சி மண்டல செயலாளர் சி.காமராஜ், அரியலூர் மாவட்ட தலைவர் விடுதலை நீலமேகன், மாவட்ட செயலாளர் க.சிந்தனைச்செல்வன், தி.மு.க. சொற்பொழிவாளர் ச.அ.பெருநற்கிள்ளி, தி.மு.க. ஒன்றிய செயலாளர் மு.ஞானமூர்த்தி, பொதுக்குழு உறுப்பினர் பூ.செல்வராஜ், முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் நா.கிருஷ்ணமூர்த்தி, தேவனூர் ஊராட்சி மன்றத் தலைவர் கு.செல்வராசு ஆகியோர் வாழ்த்துரை வழங்கிய பின்னர் கழக பொதுச் செயலாளர் கவிஞர் கலி.பூங்குன்றன் மணமக்களை உறுதிமொழி கூறச் செய்து மணவிழாவை நடத்தி வைத்தார்.
அவர் தனது வாழ்த்துரையில், சுயமரியாதைத் திருமண மேடை என்பது ஒரு கொள்கை மேடை. இந்த மேடையில் பெரியார் எடுத்துக்கூறிய பெண் கல்வி, பெண்களுக்கு சொத்துரிமை, குழந்தை மணம் கூடாது என்ற கருத்துகள்தான் அரசாங்கத்தின் சட்டங்களாயின என்றும் பொதுஉடைமை பேசுகின்ற, விஞ்ஞானப்பூர்வமான நாத்திகம் பேசுகின்றவர்களால் கூட பார்ப்பனர்களை விலக்கி இல்ல நிகழ்ச்சிகளை நடத்திட இயலவில்லை. தமிழ்நாட்டில் அத்தகைய புரட்சியை ஏற்படுத்தியவர் பெரியார் என எடுத் துக்கூறி வாழ்வியல் உரையாற்றினார்.
ஒன்றிய அமைப்பாளர் முத்தமிழ்ச் செல்வன் நன்றி கூறினார். மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் தங்க. சிவமூர்த்தி நிகழ்ச்சியை ஒருங்கிணைத் தார்.
நிகழ்ச்சியில் மண்டல இ.அ. செயலாளர் மு.ராசா, மாவட்ட ப.க. அமைப்பாளர் ஆசிரியர் இளங்கோவன், கீழ மாளிகை ஊ.ம.தலைவர் இரா.அன்புச்செல்வன், தமிழக வாழ்வுரிமை கட்சி மாவட்ட செயலாளர் சாமிநாதன், மாவட்ட இளைஞரணி தலைவர் பொன்.செந்தில்குமார், பொதுக்குழு உறுப்பினர் சு.மணிவண்ணன், மாவட்ட இ.அ.து.செயலாளர் வெ.இளவரசன், அரியலூர் ஒன்றிய தலைவர் சி.சிவக்கொழுந்து, செயலாளர் ந.செல்லமுத்து, செ.ஏழுமலை, ஜே.பி.ஆசைத்தம்பி, செந்துறை ஒன்றிய செயலாளர் சேகர் உள்ளிட்ட தோழர்களும் உறவினர்களும் சிறப்பாக பங்கேற்றனர்.

No comments:

Post a Comment