Sunday 5 August 2012

தா.பழூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கழக துணைப்பொதுச்செயலாளர் துரை.சந்திரசேகரன் உரையாற்றினா


.
தா.பழூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கழக துணைப்பொதுச்செயலாளர் துரை.சந்திரசேகரன் உரையாற்றினார். (21.7.2012)
தா.பழூர், ஜுலை 25-அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஒன்றிய திராவிடர் கழகத்தின் சார்பில் திராவிடத்தால் வாழ்கிறோம் என்ற மாபெரும் கழக பொதுக் கூட்டம் 21.7.2012 சனிக்கிழமை மாலை 6மணியளவில் தொடங்கி சிறப் பாக நடைபெற்றது ஒன்றிய தலைவர் மகாலிங்கம் தலைமை யேற்க, ஒன்றிய செய லாளர் பி.வெங்கடாசலம் வரவேற்புரையாற்றினார். மாவட்ட தலை வர் விடுதலை நீலமேகன், மண்டல செயலாளர் சி.காமராஜ், முன்னிலை வகிக்க மாவட்ட செய லாளர் க.சிந்தனைச் செல்வன், தொடக்கவு ரையாற்றிய பின்னர் திராவிடர்கழக துணைப் பொதுச்செயலாளர் துரை.சந்திரசேகரன் திராவிட இயக்க முன் னோடிகள் குறித்தும் கடவுள் மத கற்ப னைகளால் மடமைக்கு ஆளாக்கப்பட்ட தமிழ் சமூகத்தை திராவிட இயக்கம் மீட்டெடுத்து வருவதுகுறித்தும் விளக்கி சிறப்புரையாற் றினார்.
முன்னதாக கழக பாடகர் ஒன்றிய து.தலைவர் இராமச்சந்திரன் கழகப் பாடல் களை பாடினார். உத்திரக்குடி கலைவாணன் மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சியை நடத்தி மக்களை கவர்ந்தார். ஒன்றிய அமைப்பாளர் சி.தமிழ்சேகரன் நன்றி கூறினார்.
பங்கேற்றோர் : மண் டல இளைஞரணி செயலாளர் மு.ராசா, பொதுக் குழு உறுப்பினர்கள் கே. பி.கலியமூர்த்தி, சு.மணிவண்ணன், மாவட்ட து.தலைவர் இரா.திலீபன், மாவட்ட து.செயலாளர்இரத்தின. இராமச்சந்திரன், மாவட்ட ப.க. தலைவர் பு.கா.அன்பழகன், மாவட்டஇ.அ.தலைவர் பொன்.செந்தில்குமார்,செயங்கொண்டம் ஒன்றிய தலைவர் வை.செல்வராஜ், தா.பழூர் ஒன்றிய ப.க.அமைப்பாளர் ஆசிரியர் இராசேந்திரன்,கோடம்குடி இரவி, உத்திரக்குடி ஆ.செயராமன் ஆண்டி மடம் ஒன்றிய தலைவர் இரா.தமிழரசன், ஒன்றிய இ.அ.செயலாளர் க.செந்தில், செந்துறை ஒன்றிய செயலாளர் சேகர், அமைப்பாளர் முத்தமிழ்ச்செல்வன், சிற்றரசு உள்ளிட்ட தோழர்களும் திரளான பொதுமக்களும் சிறப்பாக பங்கேற்றனர்.
இயக்கத்தில் இணைந்த இளைஞர்கள் தேவாமங்கலம் முத்து, அ.மின்னல் கண்ணன், ஜோதிபாசு, மாசிலாமணி, அமிர்தராயன்கோட்டை சுரேஷ் உள்ளிட்ட தோழர்கள் துணைப்பொதுச் செயலாளர் துரை.சந்திரசேகரன் முன்னிலையில் இயக்கத்தில் இணைந் தனர். முன்னதாக தந்தை பெரியார்,அறிஞர் அண்ணா,மக்கள் தொண்டர் க.சொ.கணேசன் ஆகியோரின் சிலைக்கு மாவட்ட செயலாளர் க.சிந்தனைச்செல்வன்  தலைமையில் தோழர்கள் மாலை அணிவித்தனர்.

No comments:

Post a Comment